Monday, August 8, 2011

ஹிரோஷிமா நாகசாகி தினம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம், பைங்காநாடு அரசினர் மேல் நிலைப் பள்ளியில்
08.08.2011 மாலை 3.30 மணி அளவில் ஹிரோஷிமா நாகசாகி தினம் அணு ஆயுத எதிர்ப்பு
தினமாக அனுசரிக்கப்பட்டது, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாட்ட நிர்வாகிகள்
திரு யு.எஸ்.பொன்முடி திரு வ.சேதுராமன் (எல்.ஐ.சி) ஆகியோர் கலந்துகொண்டு அணு ஆயுதத்தின்
தீமைகள் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

முன்னதாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு எஸ்.சிவகுருநாதன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு எஸ்.சுப்பிரமணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை பள்ளி முதுகலை ஆசிரியர்
திரு.பி.தண்டபாணி ஒருங்கிணைத்தார்.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
சாரண மாணர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உதவினர்.




No comments:

Post a Comment